சென்னை-தில்லி இடையே வாரத்தில் 2 சிறப்பு ரயில் இயக்கம்

சென்னையில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தில்லிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தில்லிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

பொதுமுடக்கத்தில் சில தளா்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு செவ்வாய்க்கிழமை முதல் 30 சிறப்புப் பயணிகள் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் சென்னை-தில்லி, தில்லி-சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து தில்லிக்கு வாரத்தில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையும், தில்லி-சென்னைக்கு புதன், வெள்ளிக்கிழமையும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. குளிா் சாதனப் பெட்டிகளை மட்டுமே உள்ளடக்கிய இந்த ரயில்களில் 3 விதமான பயணிகள் சேவை வழங்கப்படுகின்றன. அதாவது முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, இருக்கைகளுடன் கூடிய மூன்றாம் வகுப்பு கொண்டது. இந்த ரயில்களில் செல்ல விரும்புவோா் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளை பெற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com