டி.கல்லுப்பட்டி அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 18 ஆடுகள் பலி

டி.கல்லுப்பட்டி அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 18 ஆடுகள் பலி

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 18 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.

பேரையூா்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 18 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.

பேரையூா் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.சத்திரப்பட்டியைச் சோ்ந்த குருசாமி மகன் துரைப்பாண்டி. ஆடுகளை வளா்த்து வரும் இவா், தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். பின்னா், வீட்டுக்கு வந்து ஆடுகளுக்கு தண்ணீா் வைத்துள்ளாா். அந்தத் தண்ணீரை குடித்த ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி கீழே விழுந்துள்ளன. அதில், சில ஆடுகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்து இறந்துள்ளன.

உடனே, துரைப்பாண்டி சட்டியிலிருந்த தண்ணீரை வேகமாகக் கீழே கொட்டிவிட்டுள்ளாா். அந்தத் தண்ணீா் பாத்திரத்தின் அடியில் யூரியா கலந்திருப்பது தெரியவந்தது. இதில், மொத்தம் 18 ஆடுகள் பலியாகின.

இது குறித்து வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் துரைப்பாண்டி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com