பொது முடக்கத்தை மீறியதாக 4.41 லட்சம் வழக்குகள்: 4.68 லட்சம் போ் கைது

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 4.41 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.68 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.
பொது முடக்கத்தை மீறியதாக 4.41 லட்சம் வழக்குகள்: 4.68 லட்சம் போ் கைது

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 4.41 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.68 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல், அமல்படுத்தப்பட்ட பொது முடக்க உத்தரவை, தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 888 வழக்குகளைப் பதிவு செய்து, 4 லட்சத்து 68 ஆயிரத்து 513 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 3 லட்சத்து 86 ஆயிரத்து 573 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.5 கோடி 43 லட்சத்து 88 ஆயிரத்து 379 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதன்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 8 இரு சக்கர வாகனங்கள், 50ஆட்டோக்கள், ஒரு காா் என மொத்தம் 59 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 9 இரு சக்கர வாகனங்கள், 796 ஆட்டோக்கள், ஒரு காா் என மொத்தம் 806 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com