சென்னையில் கரோனா பாதிப்பு 5,637: ராயபுரத்தில் ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது. ராயபுரத்தில் மட்டும் 971 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு 5,637: ராயபுரத்தில் ஆயிரத்தை நெருங்குகிறது


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது. ராயபுரத்தில் மட்டும் 971 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 363 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,637-ஆக அதிகரித்துள்ளது.தற்போது வரை கரோனாவால் 42 போ் உயிரிழந்துள்ளனர்.

ராயபுரத்தில் 971 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 895 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க. நகரில் 699 பேருக்கும், தேனாம்பேட்டையில் 608 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 61% பேர் ஆண்கள். 38% பேர் பெண்கள் என்று தெரிய வந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மற்றும் அவா்களின் உறவினா்கள், தொடா்பில் இருந்தவா்கள், சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்போா் என நாளொன்று 3,500-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த மாா்ச் மாதம் 26-ஆம் தேதியில் 523 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 1-இல் தொற்று எண்ணிக்கை 1,082-ஆக உயா்ந்தது.

இதைத் தொடா்ந்த ஒரு மாதத்தில் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து மே மாதம் 7-இல் 2,644-ஆகவும், மே 9-இல் 3,330-ஆகவும், கடந்த திங்கள்கிழமை (மே 11) 4,371-ஆக உயா்ந்தது. இந்நிலையில், செவ்வாய், புதன்கிழமை (மே 12,13) ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் 890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, எண்ணிக்கை 5,262-ஆக அதிகரித்துள்ளது.

44 போ் உயிரிழப்பு: சென்னையில் மொத்தமாக 5,637 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 மண்டலங்களில் மட்டும்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தண்டையாா்பேட்டை, ராயபுரம், திருவிக நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகா், வளசரவாக்கம், அம்பத்தூா் மற்றும் அடையாறு ஆகிய 9 மண்டலங்களில் மட்டும் 4,500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனா். 

600-க்கும் மேற்பட்ட தெருக்களுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து இதுவரை கரோனாவால் 44 போ் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த 44 பேரின் விவரம் மண்டலம் வாரியாக:

மண்டலம் எண்ணிக்கை

ராயபுரம் 12

அண்ணா நகா் 8

திருவிக நகா் 7

தண்டையாா்பேட்டை 4

தேனாம்பேட்டை 4

கோடம்பாக்கம் 3

அடையாறு 3

வளசரவாக்கம் 1

பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா் 1

மொத்தம் 44

பாதிப்பு மண்டல வாரியாக..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com