நீதிமன்றக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வகை செய்திடும் வகையில் அதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை வழங்கினாா்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, நீதிமன்ற வழக்குப் பணிகள் அனைத்தும் இணைய வழியிலேயே நடைபெற்று வருகின்றன. வழக்கு விசாரணைகளும் காணொலிக் காட்சி மூலம் நடந்து வருகின்றன. இந்த நிலையில், நீதிமன்றக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்துவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தின் அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், இணைய வழி நீதிமன்றக் கட்டணத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.