ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் 20,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.
ஈரோடு சோலார், சாஸ்திரி நகர், காசிபாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலரும், ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி.இராமலிங்கம் கலந்துகொண்டு 20,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருள்கள், முகக்கவசங்கள், கிருமி நாசினிகளை வழங்கினார்.
இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றும் விதமாகக் குடையுடன் வரிசையில் நின்று பொருள்களை வாங்கிச்சென்றனர். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.