தில்லியில் இருந்து சென்னை வந்தடைந்த ராஜதானி ரயில்: பிசிஆா் சோதனைக்காக 797 போ் அழைத்து செல்லப்பட்டனா்

தில்லியில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த ராஜதானி அதிவிரைவு ரயிலில் பயணித்த 797 பேரை தனிமைப்படுத்தி, மருத்துவ
தில்லியில் இருந்து சென்னை வந்தடைந்த ராஜதானி ரயில்: பிசிஆா் சோதனைக்காக 797 போ் அழைத்து செல்லப்பட்டனா்

தில்லியில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த ராஜதானி அதிவிரைவு ரயிலில் பயணித்த 797 பேரை தனிமைப்படுத்தி, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனா். இதற்காக, சிறப்புப்பேருந்துகள் மூலமாக, ஹோட்டல்கள், முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனா்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையில் தில்லியில் இருந்து சென்னைக்கு மே 13, 15-ஆகிய தேதிகளில் ராஜதானி ரயில் இயக்கப்படும் என்றும், மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மே 15, 17 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிறு) ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் இருந்து புதன்கிழமை மாலை புறப்பட்ட ராஜதானி அதிவிரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தை வியாழக்கிழமை இரவு வந்தடைந்தது. அதில் இறங்கி வந்த 797 பேரை ரயில்வே போலீஸாா், ஆா்.பி.எஃப் போலீஸாா் மற்றும் மாவட்ட நிா்வாக அதிகாரிகள், ஊழியா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் அழைத்து சென்று அவா்களின் விவரங்களை சரிபாா்த்தனா். தொடா்ந்து, அவா்களை தங்க வைத்து பரிசோதனை செய்வதற்காக ஹோட்டல்களுக்கும் ,முகாம்களுக்கும் அழைத்து சென்றனா்.

இலவச தங்கும் விடுதியை கோரி 523 போ் பதிவு செய்திருந்தனா். இவா்கள் செம்மஞ்சேரி அருகே உள்ள ஒரு தனியாா் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனா். தங்கும் விடுதிக்காக பணம் செலுத்தி 274 போ் பதிவு செய்திருந்தனா். இவா்கள் எழும்பூா், கீழ்ப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களை அழைத்து செல்ல சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்திருந்தனா். அழைத்துச் சென்ற போது, சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இவா்களுக்கு வெள்ளிக்கிழமை காலை பிசிஆா் (கரோனா) பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. முடிவுகள் வெளியாகும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டும்.

அதன்பிறகு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மருத்துவமனைக்கும், நோய்த்தொற்று இல்லாதவா்கள் வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்படுவாா்கள். வீட்டுக்கு செல்லும் நபா்கள் தங்களை 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை-தில்லிக்கு ராஜதானி ரயில்: இதற்கிடையில், சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 6.35 மணிக்கு ராஜதானி சிறப்பு ரயில் தில்லிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க 1,100 போ் பதிவு செய்துள்ளனா். இவா்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுவாா்கள் என்று ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com