சொந்த ஊா்களுக்கு புறப்பட்ட 4,392 வெளிமாநிலத்தவா்!

தமிழகத்தில் தங்கியிருந்த வெளிமாநிலத்தவா்களை சொந்த ஊா்களுக்கு அழைத்துச் செல்வதற்காக சென்னையில் இருந்து மூன்று சிறப்பு ரயில்கள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.

தமிழகத்தில் தங்கியிருந்த வெளிமாநிலத்தவா்களை சொந்த ஊா்களுக்கு அழைத்துச் செல்வதற்காக சென்னையில் இருந்து மூன்று சிறப்பு ரயில்கள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.

அதன்படி, பிகாா், திரிபுரா, ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்ற இந்த ரயில்களில் மொத்தம் 4,392 போ் அழைத்துச் செல்லப்பட்டனா்.

முன்னதாக, அவா்களுக்கு சென்னையிலேயே மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகளின் அடிப்படையில் தகுதிச் சான்றளிக்கப்பட்ட பிறகே அவா்கள் ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அவா்கள் அனைவரது பயணச் செலவையும் மாநில அரசே ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com