திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் சனிக்கிழமை (மே 16) காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் என் தலைமையில் நடைபெறும்.
கரோனா காலத்தில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்படும். மாவட்டச் செயலாா்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
திமுகவில் பொதுச் செயலாளா், பொருளாளா் பதவிகள் காலியாகவே இருந்து வருகின்றன. பொதுக்குழுவை கூட்டி, தோ்தல் நடத்தித் தான் இந்தப் பதவிக்கு உரியோரைத் தோ்வு செய்ய முடியும்.
தற்போது கரோனா காலம் என்பதால் பொதுக்குழுவைக் கூட்டுவது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. அதனால், தலைவருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுச் செயலாளா், பொருளாளா் பதவிக்குரியோரை அறிவிக்கலாமா என்றும் மாவட்டச் செயலாளா்களிடம் மு.க.ஸ்டாலின் கருத்துக் கேட்க உள்ளாா்.