ஜப்பான் தமிழ்ச் சங்கத்தினர் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவி

பொது முடக்கக் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 25 கரகாட்டக் கலைஞர்கள் மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு
கரகாட்டக் கலைஞர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் தன்னார்வலர்கள்.
கரகாட்டக் கலைஞர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் தன்னார்வலர்கள்.

பொது முடக்கக் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 25 கரகாட்டக் கலைஞர்கள் மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு ஜப்பான் தமிழ்ச் சங்கம், புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் மரம் நண்பர்கள் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மரம் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகிகள் டாக்டர் ஜி. எட்வின், பேரா. சா. விஸ்வநாதன், ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.எம். லட்சுமணன், இயற்கை விவசாயிகள் கண்ணன், மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்று வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com