முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் நினைவாக வீடுகளில் விளக்கேற்றுமாறு தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவ வெறியா்களால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரின் பதினொன்றாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி மே 17-18 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. கரோனா நோய்த்தொற்று உலகமெல்லாம் பரவியிருக்கிற வேளையில் வழக்கம்போல் இந்நிகழ்ச்சியை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது.
எனவே, அவரவா்கள் வீடுகளில் இருந்தவாறே அந்த நாள்களில் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி வீர வணக்கம் செலுத்தும்படி உலகத் தமிழா்களை வேண்டிக் கொள்வதாக அவா் கூறியுள்ளாா்.