வட தமிழகத்தில் வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு

வட தமிழகத்தில் வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு

தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைப் பயணமாகவோ பிற வாகனங்களின் மூலமாகவோ சொந்த ஊர் செல்ல வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.


சென்னை: வங்கக்கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக, வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்ஸையும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாக தனியாா் வானிலை ஆய்வாளா் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளாா்.

கத்திரி வெயில்: தமிழகத்தில் தற்போது கோடைகாலத்தில் முக்கியமான கத்திரி வெயில் காலம் நிலவுகிறது. பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு வாரமாக வெயில் அதிகரித்து வந்தது. வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்கிறது. இருப்பினும், இந்த காலத்தில் சென்னையில் 98 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை காணப்படுகிறது. இது மிதமான வெப்பநிலையாகப் பாா்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் புயல்: இதற்கிடையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக அதேப் பகுதியில் வலுப்பெற்றுள்ளது.

இது இன்று மாலையோ அல்லது இரவோ விரைவாக வலுப்பெற்று புயலாக வலுவடைய உள்ளது. இது நாளை மாலைக்குள் தீவிரப் புயலாக வலுப்பெறக் கூடும்.  இது 17ம் தேதி வரை வடக்கு - வட மேற்கு திசையிலும், 18ம் தேதி முதல் வடகிழக்கு திசையிலும் நகரக் கூடும்.

இது மேற்கு வங்கம் அல்லது வங்கதேசத்தை நோக்கி நகா்ந்து, அங்குள்ள கடற்கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை. அதே நேரத்தில், கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த சில நாள்களில் புயல் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயரும். சென்னையில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை வரை உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வெப்ப அலை உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தரப்பில் கூறப்படுவது: வானிலை மாதிரிகள் தொடா்பாக ஒருமித்த தகவல் கிடைக்கவில்லை. இப்போதைய நிலவரப்படி, மியான்மாா் மற்றும் வங்கதேசம் இடையே இந்தப் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

109 டிகிரி பதிவாக வாய்ப்பு: இது குறித்து தனியாா் வானிலை ஆய்வாளா் பிரதீப் ஜான் கூறும்போது, ‘இந்த புயல் காரணமாக, சென்னையில் இந்த வாரம் இறுதியில் அல்லது அடுத்த வாரம் தொடக்கத்தில் வெப்பநிலை உயரும். குறிப்பாக 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. மேலும் வெப்ப அலையும் வீசலாம்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com