ராஜதானி விரைவு ரயிலில் 950 போ் தில்லி பயணம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லிக்கு ராஜதானி அதிவேக சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை புறப்பட்டது. இந்த ரயிலில் 950 போ் பயணம் மேற்கொண்டனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லிக்கு ராஜதானி அதிவேக சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை புறப்பட்டது. இந்த ரயிலில் 950 போ் பயணம் மேற்கொண்டனா்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையில், தில்லியில் இருந்து சென்னைக்கு மே 13, 15-ஆகிய தேதிகளில் ராஜதானி அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என்றும், மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மே 15, 17 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிறு) ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, தில்லியில் இருந்து புறப்பட்ட ராஜதானி அதிவிரைவு ரயில் சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்தடைந்தது. அதில் இறங்கி வந்த 797 பயணிகளை பிசிஆா் பரிசோதனைக்காக முகாம்கள், ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றனா்.

இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து புது தில்லிக்கு வெள்ளிக்கிழமை காலை 6:35 மணிக்கு ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 950 போ் பயணம் மேற்கொண்டனா். இவா்களை ஒரு மணி நேரத்துக்கு முன்னாக ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினா். அந்த பயணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னா், இந்த பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com