உசிலம்பட்டி: மும்பையில் இருந்து உசிலம்பட்டி பகுதிக்கு வந்த 8 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியபட்டி கிராமத்திலுள்ள கிருஷ்ணா வேளாண் கல்லூரி, வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்களுக்கு தனிமைப்படுத்தப்படும் முகமாக ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இன்னிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து வந்த 154 பேர் இம்முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 8 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் 3 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.