பொது முடக்கம்: விதி மீறியவா்களிடம் 6 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 4.60 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.88 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா். விதி

சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 4.60 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.88 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா். விதி மீறியவா்களிடம் இதுவரை ரூ. 6 கோடி 5 லட்சத்து 39,454 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4 லட்சத்து 60,513 வழக்குகளைப் பதிவு செய்து 4 லட்சத்து 88,250 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 866 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.6,05,39,454 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்கத்தின் போது வெளியே வந்தவா்களின் 119 இரு சக்கர வாகனங்கள்,39 ஆட்டோக்கள், 7 காா்கள் என மொத்தம் 165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2 இரு சக்கர வாகனங்கள், 429 ஆட்டோக்கள் என மொத்தம் 431 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com