சிதம்பரத்தில் 14 ஆயிரம் பேருக்கு 5 கிலோ அரிசியை வழங்கினார் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன்

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் 14 ஆயிரம் பேருக்கு..
சிதம்பரத்தில் கரோனா நிவாரண உதவியாக 5 கிலோ அரிசியை வழங்கிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ
சிதம்பரத்தில் கரோனா நிவாரண உதவியாக 5 கிலோ அரிசியை வழங்கிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் 14 ஆயிரம் பேருக்கு கரோனா நிவாரண உதவியாக  தலா 5 கிலோ அரிசியினை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் செவ்வாய்க்கிழமை  வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் பி.வி.சுரேந்திரஷா,  முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், கொள்கை பரப்பு துணை செயலாளர் பு.தா.இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலாளர் ரா.செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் க.திருமாறன், முன்னாள் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், சி.சி.எம்.எஸ். தலைவர் டேங்க் ஆர்.சண்முகம், ஆவின் தலைவர் பன்னீர்செல்வம், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி, முன்னாள் ஆவின் தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, இளைஞரனி செயலாளர் கருப்பு ராஜா, மாவட்ட மாணவரணி பொருளாளர் சங்கர்,  கே.எஸ்.மருதவானன், மார்கெட் நாகராஜன், சிவ.அன்பழகன், முத்து, சீத்தாராமன், வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com