செங்கல்பட்டில் புதிதாக 55 பேருக்கு கரோனா; காஞ்சிபுரத்தில் கரோனா பாதிப்பு 223 ஆனது

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் புதிதாக 55 பேருக்கு கரோனா; காஞ்சிபுரத்தில் கரோனா பாதிப்பு 223 ஆனது


சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 600-ஐ கடந்தது.

இதேபோல காஞ்சிபுரத்தில் இன்று கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 81 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்த 80 பேருக்கும், தில்லியில் இருந்து வந்த ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com