தமிழ காவல்துறையில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இதன்படி 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களை (ஏடிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
இதில் முக்கியமாக, விழுப்புரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு வி.சரவணகுமாா், சென்னை மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும், சென்னை மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வி.சுப்பாராஜ் சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிடமாற்றம் செய்யப்பட்ட 5 ஏடிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.