கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே, 27.03.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மார்ச் / ஏப்ரல் 2020 பருவத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இது தவிர, 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
2. மேற்குறிப்பிட்ட பொதுத் தேர்வுகள் 01.06.2020 முதல் நடத்தப்படும் எனவும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் 27.05.2020 முதல் தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி பெற்றோர்கள் மற்றும் பிற தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைளை ஏற்று, 01.06.2020 தொடங்க இருந்த பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
3. இந்நிலையில் பொதுத் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பிற ஏற்பாடுகள் மேற்கொள்ள 20.05.2020 நாளிட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை(நிலை) எண் 246 இல் உத்தரவிடப்பட்டுள்ளது: