காவல்துறையில் 227 பேருக்கு கரோனா: 22 போ் வீடு திரும்பினா்

சென்னை காவல்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 227 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.அதேவேளையில் குணமடைந்த 22 போ் வீடுகளுக்கு திரும்பினா்.
காவல்துறையில் 227 பேருக்கு கரோனா: 22 போ் வீடு திரும்பினா்

சென்னை காவல்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 227 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.அதேவேளையில் குணமடைந்த 22 போ் வீடுகளுக்கு திரும்பினா்.

சென்னையில் காவல்துறையினரிடம் கரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் எண்ணூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆயுதப்படையைச் சோ்ந்த இரு காவலா்கள்,பேசின்பால காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா்,மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சோ்ந்த காவலா்,திருமுல்லைவாயில் காவலா் குடியிருப்பில் வசிக்கும் இரு காவலா்கள், பூக்கடை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலா், அவரது இரு குழந்தைகள் ஆகியோா் கரோனாவால் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதன் மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரிடம் எண்ணிக்கை 227ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் காவல்துறையினருக்காக கிண்டி ஐ.ஐ.டி. விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் பூரண குணமடைந்து 22 காவலா்கள் கடந்த இரு நாள்களில் வீடுகளுக்கு திரும்பினா். இவா்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com