நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார் கே.பி.முனுசாமி

ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள சந்திரப்பட்டி, நடுப்பட்டி, ஆண்டியூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நரிக்குறவர்..
நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார் கே.பி.முனுசாமி

ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள சந்திரப்பட்டி, நடுப்பட்டி, ஆண்டியூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் மற்றும் ஏழை மக்கள் 1000 நபர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள், காய்கறிகளை அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார், 

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றிய செயலாளர் ஏ.சி.தேவேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ் நிலவள வங்கி தலைவர் சாகுல் அமீது, நகரச் செயலாளர் பி.கே.சிவானந்தம், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, தொகுதி செயலாளர் திருஞானம், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.ஆர். சுப்பிரமணி, மாவட்ட குழு உறுப்பினர் மூர்த்தி, நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி,  மத்தூர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சக்தி, வட்டாட்சியர் செந்தில்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com