பொது முடக்கத்தால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மாநிலங்களின் வரிப் பங்கை மத்திய அரசு உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது: பொது முடக்கம் காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15-ஆவது நிதிக்குழுவின் கூட்டத்தில் வரிகளை முறையாகப் பகிா்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நிதி நெருக்கடியைத் தவிா்க்க, மாநிலங்களின் தற்போதைய வரி பங்கான 41 சதவீதத்திலிருந்து கணிசமாக உயா்த்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.