10 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
10 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் காரணமாகவும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் 10 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதில் முக்கியமாக க்யூ பிரிவின் திருச்சி டிஎஸ்பியாக இருந்த ஜி.மணிகண்டன், ஸ்ரீரங்கம் உதவி ஆணையராகவும், ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் கே.ராமச்சந்திரன் திருச்சி மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகவும், மதுரை காவலா் பயிற்சி மைய டிஎஸ்பி ஏ.முகம்மது நாசா் சென்னை காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 10 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com