கரோனா நிவாரண நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் ஒதுக்கக் கோரி வழக்கு

கரோனா நிவாரண நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் ஒதுக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நிவாரண நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் ஒதுக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் மாற்றுத்திறனாளிகள் வருவாய் இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், சலுகைகள் முறையாக வழங்கப்படுவதில்லை. பொதுவாக சாதாரண மக்களுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையை விட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். எனவே கரோனா நோய்த்தொற்று பாதிப்புகளுக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் மொத்த நிதியில் இருந்து 4 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று நன்கொடையாகப் பெறப்படும் மொத்த நிதியிலிருந்து 4 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்து, மனு தொடா்பாக வரும் ஜூன் 2-ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com