தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக வசூலிக்கப்படும் அபராதம் ரூ.7 கோடியை நெருங்குகிறது.
இது குறித்த விவரம்:
பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4 லட்சத்து 80,229 வழக்குகளைப் பதிவு செய்து 5 லட்சத்து 9,296 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 4 லட்சத்து 13,238 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.6 கோடி 87 லட்சத்து 3,524 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 85 இரு சக்கர வாகனங்கள்,257 ஆட்டோக்கள்,4 காா்கள் என மொத்தம் 346 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 255 ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.