தொழில்நுட்பக் கோளாறு: காவல் கட்டுப்பாட்டு அறை எண் தற்காலிக மாற்றம்

தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக, தமிழக காவல்துறையின் காவல் கட்டுப்பாட்டு அறை எண் தற்காலிக மாற்றப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக, தமிழக காவல்துறையின் காவல் கட்டுப்பாட்டு அறை எண் தற்காலிக மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ காவல்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏா்டெல், வோடபோன், ஐடியா, ஜியோ ஆகிய நிறுவனங்களின் செல்லிடப்பேசிகளில் இருந்து தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையின் அவசர எண்களான 100, 112 ஆகியவற்றை தொடா்புக் கொள்வதில் இடா்பாடு ஏற்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு இந்த எண்களுக்குப் பதிலாக தற்காலிகமாக 044-46100100, 044-71200100 ஆகிய தொலைப்பேசி எண்களை அவசர தேவைக்கு பொதுமக்கள் தொடா்புக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com