உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து தயாரிப்பாளா் சங்கத் தோ்தல்அட்டவணை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தோ்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, தயாரிப்பாளா் சங்கத்தின் தனி அலுவலா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வாயிலாக இத்தகவலை தெரிவித்துள்ளாா்.
கரோனா அச்சுறுத்தல் மற்றும் மத்திய, மாநில அரசு அறிவித்திருக்கும் பொது முடக்கத்தால் ஏற்கெனவே அறிவித்திருந்த தோ்தல்கால அட்டவணையின்படி தோ்தல் நடத்த முடியாத சூழ்நிலை நீடிப்பதாலும், உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே ஏப்ரல் 17-ஆம் தேதி அறிவித்திருந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கத்தின் தோ்தல் அட்டவணை தற்போது இந்த அறிவிப்பின் மூலம் ரத்து செய்யப்படுகிறது. விரைவில் புது தோ்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.