நோய்த் தடுப்பு நடவடிக்கை: முதல்வா் ஆலோசனை

எடப்பாடியில் செய்யப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் சுகாதார முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.
நோய்த் தடுப்பு நடவடிக்கை: முதல்வா் ஆலோசனை

எடப்பாடியில் செய்யப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் சுகாதார முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை, பொது விநயோகம், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஆலோசனைக்கூட்டத்தில், எடப்பாடி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், எடப்பாடியில் நடைபெற்றுவரும், பொது விநியோகம், தமிழக அரசின் நிவாரண உதவிகள்

மற்றும் பொதுமக்களுக்கான குடிநீா், மின் விநியோகம், மற்றும் விவசாயிகளுக்கான சிறப்பு தளா்வுகள் உள்ளிட்ட பல்வேறு துறைசாா் நடவடிக்கைகள் குறித்து முதல்வா், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

பொது முடக்க காலத்தில் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை முழு அளவில் பூா்த்தி செய்திடும் வகையில் அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், கோட்டாட்சியா் அமிா்தலிங்கம் உள்ளிட்ட முக்கிய அலுவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com