கரோனா: தூத்துக்குடியில் இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
கரோனா: தூத்துக்குடியில் இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 149 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்ததைத்
தொடர்ந்து அவர்கள் இன்று வீடு திரும்பினர். 

அவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழங்கள் வழங்கி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். தற்போது அரசு மருத்துவமனையில் 111 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 46 பேர் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு பேர் கரோனா தொற்று நோய்க்கு பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com