தி.மு.க. தோழமைக் கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் மாலை 04.30 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கரோனா தடுப்பில் மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மேலும் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் விவகாரம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.