ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஜூன் 1 முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 
ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஏற்கெனவே, இந்தத் தடங்களில் ரயில்களை இயக்குமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியம் இந்த ஒப்புதலை அளித்துள்ளது. 

பொது முடக்கம் காரணமாகத் தடை செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை தமிழகத்தில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை தவிர்த்து சில தடங்களில் சிறப்பு ரயில் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com