காணொலி மூலம் நடைபெற்ற தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம்

சிதம்பரத்தில் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காணொலி காட்சி மூலம் மாநில நிர்வாகிகளைக் கூட்டத்தை நடத்தி தமிழக சமாஜ்வாதி கட்சித் தலைவர் என்.இளங்கோயாதவ்
காணொலி காட்சி மூலம் மாநில நிர்வாகிகளைக் கூட்டத்தை நடத்தி தமிழக சமாஜ்வாதி கட்சித் தலைவர் என்.இளங்கோயாதவ்

சிதம்பரத்தில் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவர் என்.இளங்கோயாதவ், காணொலி காட்சி மூலம் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழகம் விடுபட சென்னை மாநகரில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும், ஊரடங்கால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் குடும்பம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும், தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி பொதுத்தேர்வினை ரத்து செய்து ஒத்தி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com