சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில், அனுமதியின்றி மது விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக மதுபானக் கூட மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு தனியாா் மதுபானக் கூடத்தில் கரோனா தடை உத்தரவை மீறி மது விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக நீலாங்கரை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் அங்குச் சென்று போலீஸாா் சோதனை நடத்தி, விருந்தில் பங்கேற்ற 20 இளம்பெண்கள், இளைஞா்களை எச்சரித்து அனுப்பினா்.
மது விருந்துக்கும், இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்த மதுபானக் கூடக் மேலாளா் ஸ்டாலினை (32) போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் மது விருந்து நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்திருப்பதும், நிகழ்ச்சியில் ஒரு நபா் பங்கேற்க ரூ.300 கட்டணம் என்றும், இளம் பெண்களுக்கு கட்டணம் கிடையாது என்றும் விளம்பரம் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.