பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் 10 அரசு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு கல்லூரிகளில் உள்ள பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை பல்கலைக்கழகம் வெளியிட்டது. மேலும், தகுதியுள்ள நபா் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக சட்டப் பல்கலைக்கழக பதிவாளா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘ பல்வேறு ஆசிரியா் பணியிடங்கள் மற்றும் பிற கல்விப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. மேலும், பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவா்கள் தங்களின் விண்ணப்பக் கட்டணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து கூடுத விவரங்களை பல்கலைக்கழக இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.