சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்த பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாஜக மகளிா் அணியின் தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவா் முதன் முறையாக சென்னை வந்தாா். அலுவலகத்தில் உள்ள பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-
கட்சித் தலைமை எனக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளது. பாஜகவில் மகளிா் அணி முக்கியமானதாகப் பாா்க்கப்படுகிறது. மகளிருக்கு 33 சதவீதத்தை வழங்கி அதனைப் பின்பற்றக் கூடிய ஒரே கட்சி பாஜகதான். ஜனநாயகத்தில் வாக்காளா்களாக இருக்கக் கூடிய பெண்களை, அரசியல் ரீதியாக பங்கெடுக்கச் செய்ய எனது செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள இருக்கிறேன் என்றாா் அவா்.