சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,830 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 2,487 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 220 பேருக்கும், செங்கல்பட்டில் 151 பேருக்கும், திருப்பூரில் 122 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 116 பேருக்கும், ஈரோட்டில் 110 பேருக்கும், திருவள்ளூரில் 107 பேருக்கும், சேலத்தில் 103 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..