தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் கடந்த மாத இறுதியில் கூடுதல் தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
எனினும் தமிழகத்தில் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது.