மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 97.28 அடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்து வருவதால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை காலை 98.23 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.28 அடியாக குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,338 கன அடியில் இருந்து 5220 கன அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 61.37 டி.எம்.சி- ஆக இருந்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்து வரும் நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1 அடி குறைந்தது.