தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், கரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகள் திறப்புக்கு எதிர்க்கட்சிகள், பெற்றோர்களின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து இன்று பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.