தமிழக ஆளுநர் பன்வாரிலால் திடீர் தில்லி பயணம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் பயணமாக விமானத்தில் சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டார். 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்


சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் பயணமாக விமானத்தில் சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டார். 

தில்லி புறப்பட்டுள்ள ஆளுநர் புரோகித் வரும் வெள்ளிக்கிழமை வரை தில்லியில் தங்கியிருந்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் வேல்நாத்திரை, பேரறிவாளனின் உள்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இரண்டாண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் தில்லி பயணம் சென்றுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று செல்வாய்க்கிழமை ஆளுநர் புரோகித்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com