சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.
சத்தியமூா்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, தமிழக மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் ஆகியோா் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சசிகாந்த் செந்தில், கா்நாடக மாநிலத்தில், மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவா். 2019 -ம் ஆண்டு செப்டம்பரில் சசிகாந்த் செந்தில் மாவட்ட ஆட்சியா் பதவியை ராஜிநாமா செய்தாா்.