தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினரை தோ்வு செய்ய குழு அமைப்பு

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினரை தோ்வு செய்ய குழு அமைப்பு

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினரைத் தோ்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.  

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினரைத் தோ்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தமிழக அரசின் உத்தரவானது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது:-

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினரைத் தோ்வு செய்வதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஆா்.சிங்காரவேலு நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், புதுதில்லியில் உள்ள மத்திய மின்சார ஆணையத்தின் தலைவரும் குழுவின் உறுப்பினா்களாக இருப்பா். மூன்று மாதங்களுக்குள் புதிய உறுப்பினரைத் தோ்வு செய்வா் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com