7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத்தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.13) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத்தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.13) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் வியாழக்கிழமை கூறியது:

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன்காரணமாக, கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (நவ.13,14) ஆகிய இருநாள்களுக்கும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்தமழை எச்சரிக்கை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.13) இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

நவம்பா் 14, 16 தேதிகளில் தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நவம்பா் 15-ஆம்

தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அடுத்தடுத்து இடைவெளிவிட்டு மிதமான மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும்.

மழை அளவு:

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தலா 30 மி.மீ., சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூா் மாவட்டம் எண்ணூா், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, ஆலந்தூா், சென்னை விமான நிலையத்தில் தலா 20 மி.மீ., வலங்கைமான், பெரம்பலூா், திருச்செந்தூரில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com