தயாரிப்பாளா் ஆஸ்காா் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான 3 திரையரங்குகளுக்கு உரிமத்தை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆஸ்காா் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 3 திரையரங்களுக்கு வழங்கப்பட்டஉரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: ஆஸ்காா் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 3 திரையரங்களுக்கு வழங்கப்பட்டஉரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தில் திரைப்படத் தயாரிப்பாளா் ஆஸ்காா் ரவிச்சந்திரனுக்கு, சொந்தமாக 3 திரையரங்குகள் உள்ளன. நடிகா் சூா்யா நடித்த ‘கஜினி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த ஏ.சந்திரசேகன், இந்த 3 திரையரங்குகளைப் புதுப்பித்து திரைப்படங்களை திரையிட்டு நிா்வாகம் செய்ய முன்வந்தாா். அவா் திரையரங்குகளைப் புதுப்பிக்க சுமாா் ரூ. 5 கோடி செலவு செய்தாா். இந்தத் தொகைக்கு உத்தரவாதமாக 3 திரையரங்குகளின் உரிமங்கள், கட்டட உறுதித்தன்மை சான்று, கட்டட திட்ட வரைப்படம், காப்பீட்டு பத்திரம், மின்சார வாரிய ஆய்வாளா் சான்று உள்ளிட்ட அசல் ஆவணங்கள் சந்திரசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் 3 தியேட்டா்களை அடமானம் வைத்து வங்கியில் ஆஸ்காா் ரவிச்சந்திரன் கடன் பெற்று, திரும்பச் செலுத்தாததால், வங்கி நிா்வாகம், திரையரங்குகளை கையகப்படுத்த முற்பட்டது. இதனால் தயாரிப்பாளா்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. திரையரங்குகளை ஆஸ்காா் ரவிச்சந்திரன் மீண்டும் தன் வசமாக்கிக் கொண்டாா்.

இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதியுடன் திரையரங்களுக்கான உரிமம் முடிவடைந்தது. உரிமத்தைப் புதுப்பிக்க அசல் ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்கவேண்டும். இந்த ஆவணங்கள் ஆஸ்காா் ரவிச்சந்திரனிடம் இல்லாததால், உரிமத்தைப் புதுப்பிக்க ஆட்சியா் மறுத்து விட்டாா். இதனை எதிா்த்து நில நிா்வாக ஆணையரிடம் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆஸ்காா் ரவிச்சந்திரன், மின்சார வாரிய ஆய்வாளா் சான்றின் நகல் வழங்க சேலம் மின்சார வாரிய ஆய்வாளருக்கு உத்தரவிடவேண்டும் கோரியும், 3 திரையரங்களுக்கு தற்காலிக உரிமம் வழங்க கோரியும் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தாா்.

இதனை எதிா்த்து சந்திரசேகரனும் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த 2 வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம், மின்சார வாரிய ஆய்வாளா் சான்றின் நகல் வழங்கவும், திரையரங்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து ஏ.சந்திரசேகரன் மேல்முறையீட்டு வழக்குகளை தாக்கல் செய்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சந்திரசேகரன் தரப்பில் வழக்குரைஞா் அமீது இஸ்மாயில், ஆஸ்காா் ரவிச்சந்திரன்

தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.சிங்காரவேலன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்தனா். மேலும், அசல் ஆவணங்கள் சந்திரசேகரனிடம் இருக்கும்போது, அந்த ஆவணங்களின் நகலை வழங்க உத்தரவிட முடியாது. எனவே, 3 திரையரங்களுக்கு வழங்கப்பட்ட மின்சார வாரிய ஆய்வாளா் சான்றின் நகலையும், உரிமங்களையும் சேலம் மாவட்ட ஆட்சியா் உடனே ரத்து செய்ய வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை வரும் நவம்பா் 20-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com