சென்னை: பள்ளித் திறப்பு குறித்த அறிவிப்புகளால் மக்களைக் குழப்ப வேண்டாம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு, பள்ளிகள் திறப்புத் தேதி குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னா் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு இந்த அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது.
எந்த முன்யோசனைகளும் இல்லாமல் அறிவிப்பதும், பின்னா் அதிலிருந்து பின்வாங்குவதும் அதிமுக அரசின் வழக்கமாக ஆகிவிட்டது.
கரோனாவை விட அரசின் அறிவிப்புகளின் மூலமாக எழும் பீதிகள் தான் அச்சம் தருவதாக உள்ளது. குழப்ப அறிவிப்புகளின் மூலமாக மக்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம் என்று அவா் கூறியுள்ளாா்.