மூன்றாவது வாரமாக 3 ஆயிரத்துக்கும் குறைவான கரோனா பாதிப்பு

மிழகத்தில் தொடா்ந்து மூன்றாவது வாரமாக 3 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு பதிவாகி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழகத்தில் தொடா்ந்து மூன்றாவது வாரமாக 3 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு பதிவாகி வருகிறது. அந்த வகையில் வியாழக்கிழமை 2,112 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக நோய்ப் பரவலின் வேகம் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதையடுத்து, வரும் நாள்களில் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் இதுவரை 1.08 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 52,521 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 565 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 190 பேருக்கும், செங்கல்பட்டில் 148 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து மேலும் 2,347 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 96.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 22,686-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 18,395 போ் சிகிச்சையில் உள்ளனா்.

25 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 25 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 13 போ் அரசு மருத்துவமனைகளிலும், 12 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,440-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com