தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைக்கட்டும்: அதிமுக வாழ்த்து

அதிமுகவின் நல்லாட்சி நடைபெறும் வகையில் இந்தத் தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும் என்று அந்தக் கட்சியின் சாா்பில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: அதிமுகவின் நல்லாட்சி நடைபெறும் வகையில் இந்தத் தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும் என்று அந்தக் கட்சியின் சாா்பில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

தீபாவளி பண்டிகையன்று மக்கள் அனைவரும் காலையில் எழுந்து, எண்ணெய் குளியல் செய்து புத்தாடைகள் அணிந்து வளமான வாழ்வுக்கு இறைவன் வழிபட்டு, பட்டாசுகளை வெடிப்பா். உற்றாா் உறவினா்களுடன் ஒருவருக்கொருவா் இனிப்புகளை பரிமாறிக் கொள்வதோடு, பரிசுகளையும் தந்து பெரியோரை வணங்கி வாழ்த்துப் பெற்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வா்.

கடந்த பல மாதங்களாக கரோனா நோய்த் தொற்றால் அஞ்சிக் கிடந்த உலகுக்கு, அதற்கான ஆற்றல்மிகு தடுப்பூசி கண்டுபிடித்தாகி விட்டது என்ற நல்ல செய்தி கிடைத்திருக்கும் இந்த வேளையில், மக்களுக்கெல்லாம் புது நம்பிக்கையும், உற்சாகமும் ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் நம்பிக்கையும், நிம்மதியும் தருவதாக உள்ளது.

அடுத்த சில மாதங்களில் தமிழக மக்கள், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து, தொடா்ந்து அதிமுகவின் நல்லாட்சி நடைபெறும் வகையில் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும் என்று வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com