சென்னை: தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
குடமுழக்கு விழா நடத்தப்படும் கோவில்களில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம்.
முகக் கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடித்து விழாக்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.