காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6497கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது, இன்று காலை வினாடிக்கு 7,770கன அடியாக அதிகரித்து உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி வீதமும் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 94.36 அடியாகவும் நீர் இருப்பு 57.77 டி.எம்.சி.யாகவும் இருந்தது.