தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தருமபுரி. திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.